இராமநாதபுரம் மாவட்டம் சுந்தரபாண்டியன் பட்டினத்தில் (SP பட்டினம்) அரும்பூரைச் சேர்ந்த கிறிஸ்தவ தேவேந்திர குலத்தைச் சார்ந்த சியோன் என்பவரின் மகன் அருள்தாஸ் டூ வீலர் மெக்கானிக் கடை நடத்தி வருகிறார். இன்று(14.10.2014) மதியம் சுமார் 2 மணியளவில் SP பட்டிணத்தைச் சேர்ந்த சையத் முகமது என்பவர் பழுதுபார்க்க கொடுக்கப்பட்ட அவரது நண்பரின் டூ வீலரை அருள்தாஸின் கடைக்குச் சென்று கேட்டார். வண்டியை என்னிடம் கொடுத்த நபரிடம் தான் வண்டியைக் கொடுப்பேன் என்று அருள்தாஸ் சொன்னவுடன் சையது முகமது அருள்தாஸை கத்தியால் குத்த வந்தார். அருள்தாஸ் கடையை விட்டு காவல்நிலையத்திற்கு ஓடிச் சென்று புகார் கொடுத்தார். உடனே அங்கு வந்த காவல்துறையினர் சையது முகமதுவை கத்தியுடன் கையும் களவுமாக பிடித்து SP பட்டிணம் காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
கைது செய்யப்பட்ட சையது முகமதுவை காவல்துறையினர் விசாரித்துக்கொண்டிருந்த போது சையது மேஜையிலே இருந்த கத்தியால் உதவி ஆய்வாளர் காளிதாஸை இரண்டு முறை குத்தினார். வேறு வழியின்றி தன் உயிரை காப்பாற்றிக்கொள்ள உதவி ஆய்வாளர் காளிதாஸ் துப்பாக்கியால் சுட்டதில் சையது முகமது இறந்தார். இறந்து போன சையது முகமது மீது பல குற்ற வழக்குகள் நிலுவையில் இருக்கிறது.
சுமார் 5 மணிக்கு இந்தத் துப்பாக்கிச் சூடு நடந்தது. அடுத்த ஒரு மணி நேரத்திற்குள் நூற்றுக்கணக்கான முஸ்லீம்கள் கிழக்கு கடற்கரைச் சாலையில் திரண்டு அந்த வழியே சென்ற வாகனங்களை அடித்து நொறுக்கினர். பேருந்துகளில் இருந்த முஸ்லீம்களை மட்டும் பத்திரமாக இறங்கி போகச்செய்து விட்டு இந்துக்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்தப் பகுதியில் ஏரளாமான போலீஸ்காரர்கள் குவிக்கப்பட்டிருந்தும் தாக்குதல் தொடுக்கும் இஸ்லாமிய கலவரக்காரர்கள் மீது இந்தப் பதிவை வலைத்தளத்தில் நாம் ஏற்றும் வரை போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சாலையிலே இந்துக்கள் மீது நடத்தப்படும் வன்முறை வெறியாட்டத்தை போலீஸார் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கின்றனர் என்று இந்து முன்னணியின் திருவாடானை ஒன்றியச்செயலாளர் திரு.கோவிந்தராஜ் தெரிவித்தார்.
- காவல்நிலையத்தின் உள்ளேயே ஒரு காவல்துறை அதிகாரியை கொலை செய்ய முயலும் அளவிற்கு சையது முகமதுவிற்கு எப்படி துணிவு வந்தது?
- காவல்துறை அதிகாரியை கொலை செய்ய முயன்ற ஒரு பயங்கர ரவுடிக்காக மதத்தின் பெயரால் இஸ்லாமிய அமைப்புகள் அணி திரண்டு வந்து கலவரம் செய்யும் போக்கு முஸ்லீம்கள் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் என்பதையும் முஸ்லீம்கள் என்ன வேண்டுமென்றாலும் செய்யலாம் என்பதையும் இந்த சம்பவம் நிலைநாட்டுகிறது.
- கூட்டமாக காவல்நிலையத்திலும், கோர்ட்டுகளிலும் கூடி இஸ்லாமியர்கள் நடத்தும் இந்த அராஜகத்திற்கு பயந்து தமிழக காவல்துறை முஸ்லீம்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பதால் தானே காவல்நிலையத்திற்குள்ளேயே காவல்துறை அதிகாரியை குத்தும் துணிவு இந்த சையது முகமதுவிற்கு ஏற்பட்டது!
இந்த சம்பவத்திலும் கூட துப்பாக்கி சூடு நடந்த ஒரு மணிநேரத்திற்குள் SP பட்டிணம் கலவர பூமியாக மாறியுள்ளது. 6 மணி முதல் சுமார் இப்போது வரை முஸ்லீம்கள் நடத்தும் தாக்குதல்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தாமல் வேடிக்கைப் பார்ப்பது முஸ்லீம்களின் அராஜகத்திற்கு காவல்துறையே ஊக்கம் அளிப்பதாக இருக்கிறது. இதே மாவட்டத்தில் கேணிக்கரை காவல்நிலைய தாக்குதல், சக்கரக்கோட்டை கவுன்சிலர் கணேசன் மீது தாக்குதல், இராமநாதபுரம் சின்னக்கடை வீதியில் காவல்துறையின் கண்காணிப்பு பரிசோதனை நிறுத்தம், முஸ்லீம்களுக்கு பயந்து பள்ளி மாணவர்கள் இந்து மதச்சின்னங்களை அணியக்கூடாது என்ற கலெக்டரின் உத்தரவு போன்ற எண்ணற்ற செயல்கள் இன்று இராமநாதபுரம் மாவட்டத்தை சிரியாவைப் போல் மாற்றிவிட்டது. முஸ்லீம்களால் தாக்கப்படும் பேருந்துகளில் இந்துக்களை மட்டும் அடையாளம் கண்டு தாக்குவது ISIS அமைப்பின் சித்தாந்தை பிரதிப்பலிப்பதாக உள்ளது.
1921ல் துருக்கி நாட்டில் தூக்கியெறிப்பட்ட இஸ்லாமிய மதத் தலைவரான கிலாபத்தின் பெயரில் சம்பந்தம் இல்லாமல் ஆயிரக்கணக்கான இந்துக்கள் கேரளத்தில் கொல்லப்பட்டனர்.
இந்த மாப்ளா கலவரத்தை போலவே இப்போது டூவீலர் மெக்கானிக் கடைச் சண்டையில் கைது செய்யப்பட்ட ஒரு ரவுடியின் பெயரில் பேருந்தில் பயணம் செய்த அப்பாவி இந்துக்கள் தாக்கப்படுகின்றனர். இந்துக்களை தாக்குவதற்கு சம்பந்தம் இல்லாமல் காரணங்களை ஏற்படுத்துவது இஸ்லாத்தின் இயல்பு. இதுவே இந்த இஸ்லாத்தின் வரலாறு. இந்த வரலாறு இன்று நம் இராமநாதபுரத்தில் தன் தலையை தூக்கியுள்ளது. ஓட்டுக்காகவும், பணத்திற்காகவும், பிரியாணிக்காகவும் தம் கடமையை மறந்தும் / மறுத்தும் செயல்படும் அரசியல் கட்சிகளும் அரசு அதிகாரிகளும் காவல்துறையினரும் இப்போதாவது விழித்துக்கொண்டு வாங்கும் சம்பளத்திற்கும் வகிக்கும் பதவிகளுக்கும் நியாயமாக நடந்துக் கொள்வார்களா?