தேசம்

ஹிந்து நாட்காட்டி

ஹிந்து நாட்காட்டி ஹிந்து நாட்காட்டி என்பதைப் பஞ்சாங்கம் எனச் சொல்கிறோம் பஞ்சாங்கம் என்ற பெயர் எப்படி வந்தது? 5 பாகங்களைக் கொண்டதால் பஞ்சாங்கம்; அவையாவன திதி வாரம், நட்சத்திரம், யோகம், கரணம் திதி என்றால் நிச்சயமாக வருகின்ற ஒன்று என்பதைக் குறிக்கிறது. உதாரணமாக, சிரார்த்தம், அமாவாசை  போன்ற நாட்களில் மூதாதையர் வரும் நாள் அது நிச்சயமாக வருகிறது அதிதி என்றால் முன்னறிவிப்பின்றி வீட்டுக்கு வருபவர்கள். பாரத நாட்டில் அதிதிக்களை தேவர்களுக்கு ஒப்பாக கருதினர். மக்கள் பாரத நாட்டில் ஒரு மூலையிலிருந்து மற்றொரு மூலைக்கு பிரயாணம் …

நாள்காட்டி பற்றிய தகவல்கள்

நாள் காட்டி பற்றிய தகவல்கள் பாரத நாட்டில் எத்தனை வகை காலண்டர்கள் இருக்கின்றன தெரியுமா?  பாரத நாடு சுதந்திரம் அடைந்தபோது காலண்டர் சீர்திருத்தக் குழு என ஒன்று ஏற்படுத்தப்பட்டது . அதற்கு மேஜய் மேக்னாத் சாஹா என்பவர் தலவரக இருந்தார் 1952லிருந்து 1957 வரை 5 ஆண்டுகளுக்கு இந்தக் குழு ஆய்வு செய்தது. ஐந்தாண்டுகள் ஆய்வு செய்த கமிட்டி கண்டுபிடித்துச் சொன்ன தகவல்கள் – பாரதத்தில் 7300 வகையான காலெண்டர்கள் இருந்தன. இந்த 7300ல் 30 கேலண்டர்கள் பிரபலமானவைகளாக இருந்தன 30லிருந்து ஒன்றைத் தேர்வு …

ஜோதிடம்

வானவியல் வல்லுனர்களான வராஹமிஹிரர், ஆர்ய்பட்டர், பாஸ்கராச்சாரியர் ஆகியோர் 1500 ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்தவர்கள். தீர்க்கதமா என்ற ரிஷி பலப்பல பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன வாழ்ந்தவர். நட்சத்திரத்தைக் கூர்ந்து கவனிப்பவர்.  தீர்க்கதமா என்றால்  நீண்ட நெடிய இருட்டையும் கூர்ந்து கவனிக்கத்தக்க வலிமை உடையவர்கள் என்பதாகும். ஹிந்து முறைப்படி வானசாஸ்திரமும் ஜோதிஷம் என்று தான் சொல்லப்படுகிறது; ஜாதக பலாபலன்களை கணித்து நடக்கப்போவதை சொல்லும் ஜோதிடமும் ஜோதிஷம்  என்றுதான் சொல்லப்படுகிறது ஜோதிடம் என்று வரும்போது சூரியன் சந்திரன் குரு சனி செவ்வாய் புதன் சுக்கிரன். பூமியோடு நெருங்கிய தொடர்பு …

காலம் நேரம்

காலம் நேரம் அடிப்படையில் காலம் என நாம் சொல்வது அண்டவெளியில் உள்ள கோள்களின் அசைவைப் பொருத்து கணக்கிடுவதாகும். யுகம் என்றால் என்ன? யுகம் எப்படி கணக்கிடப்படுகிறது? அஹோராத்ர என்ற சமஸ்க்ருதச் சொல் இரு பதங்களின் இணைப்பு ஆகும் அஹ – என்றால் பகல்; ராத்ரி என்பது இரவு இப்படி பகலும் இரவும் தொடர்ச்சியாக மாறி மாறி வருவதால் இதற்கு அஹோராத்ர எனப் பெயர் இதிலிருந்துதான் ஹோரை என்ற பதம் நேரத்தைக் குறிப்பதாக வருகிறது ஹோரா என்ற சொல்லிலிருந்துதான் ஹோராலஜி என்ற ஆங்கிலச் சொல் வந்துள்ளது. …

ஹிந்துக் கடவுளர்கள்

ஹிந்துக் கடவுளர்கள் பேரண்டம் சிதறி கடவுளர்கள் வெளிப்பட்டனர். பிரம்மா விஷ்ணு சிவன் என்ற மும்மூர்த்திகள் தத்தம் செயல்பாட்டுக்காகத் தோன்றினார்கள் மும்மூர்த்திகள் செயல்பாட்டுக்கு சக்தி அளிப்பதற்காக தேவியர்களும் தோன்றி உடன் நின்றனர், முறையே சரஸ்வதி, லக்ஷ்மி, துர்க்கை ஆவார்கள். இவர்களைத் தவிர படைப்புத் தத்துவத்தில் கணேசர், சூரியன் கார்த்திகேயன் ஆகியோரையும் சேர்த்துக் கொண்டார்கள். கணேசர் என்ற சொல் கண ஈசர் என்பதாகும். கண என்றால் எண்ணிக்கை, எண்ணிக்கையில் கூடுதலானது,, ஈசர் என்றல் கடவுள் கணக்குக் கடவுள் கணேசர் ஆவார். மதம் மதம் என்ற சொல் மனிதன் …

படைப்புத் தத்துவ விளக்கம்

பஞ்சபூதத் தத்துவம் பஞ்சபூதங்களையும் சிவபெருமானோடு இணைத்துக் கோயில் கட்டி வைத்தனர் நமது முன்னோர்கள் ஆகாயம் – சிதம்பரம்  நடராஜர்வாயு ( காற்று) – காளஹஸ்தி -காளத்தீஸ்வரர்அக்னி(நெருப்பு) – திருவண்ணாமலை  அருணாசலேஸ்வரர்நீர் –  திருவானைக்கோவில் ஜம்புகேஸ்வரர்பூமி – காஞ்சி ஏகம்பரேஸ்வரர் சிவலிங்கம் சிவன் என்பவர் அழிப்பவர் இல்லை; படைக்கப்பட்ட பொருள்கள் மறு உருவாக்கம், மறு சுழற்சி பெறுவதற்கு அருளுபவர். ஹிந்து மரபு படி இறத்தல் என்பது ஒரேடியாக அழிந்து தொலைந்து விடுவது என்பதே இல்லை. இறத்தல் என்பது மீட்டுருவாக்கத்துக்கான முதல் படி. அதாவது பொருட்கள் சுழற்சி …

பிரபஞ்சத் தோற்றமும் உள்ளடக்கமும்

பிரபஞ்சத் தோற்றமும் உள்ளடக்கமும் நவீன விஞ்ஞான ஆராய்ச்சியில் இப்போது கடவுள் துகள் பற்றிப் பேசுகிறார்கள். அதில் அண்ட வெடிப்புக்குப் பின்னே தான் துகள்கள் உருவாயின. அதன் பின்னேதான் பொருட்கள் உண்டாயின எனக் கண்டு பிடித்துச் சொல்கிறார்கள். இங்கே கேள்வி என்ன என்றால் ஒன்றுமில்லாதது என்றால் வெடிப்புக்குப் பின் எப்படி துகள்கள் வந்தன என்பதே நம் முன்னே இருக்கும் கேள்வி. வேதமோ அந்த நிலையைத் துல்லியமாக என்ன என்று சொல்கிறது. அதாவது அண்ட வெடிப்புக்கு முன் சக்தியும் பொருளும் அடங்கிய நிலையில் இருக்கும்போது ஒன்றை ஒன்று …

உலகம் உருவானது எப்படி?

சிருஷ்டி விஞ்ஞானத்தைப் பற்றி இந்தக் கட்டுரை மூலம் அறிந்து கொள்வோம். வேத புராணப் பார்வையில் உலகம் எப்படி உருவானது என்று அறிந்து கொள்வதற்கு முன் அபிரகாமிய மதங்கள் படைப்பு என்ன சொல்லிற்று, அவை உண்மைதானா என்பதனையும் அறிந்து கொள்வோம் இன்றைக்கு விஞ்ஞானத்தை பொருளாதாரத்தைப் பற்றியெல்லாம் போதிக்கின்ற புகழ் பெற்ற பல்கலைக் கழகங்களான கேம்பிரிட்ஜ், ஹார்வேர்டு, ஆக்ஸ்ஃபோர்டு யேல் போன்றவை தொடங்கப்பட்டதன் நோக்கமே கிறிஸ்தவத்தைப் பரப்புவதற்காகத் தான் .இறையியல் கோட்பாட்டைப் பரப்பவே ஆரம்பிக்கப்பட்டன. அங்கே கூட என்ன சொல்லிக் கொடுக்கப்பட்டது என்றால் உலகம் 7 நாட்களில் …

ஹிந்து நாகரீகத்தின் வரலாறு

ஹிந்து நாகரீகத்தின் வரலாறு ஹிந்து நாகரீகத்தின் வரலாறு என்று பிரிட்டீஷ்காரன் மூலம் நமக்குத் தரப்பட்டது  பொய்களையும் கட்டுக்கதைகளையும் உடையது. பாரத நாட்டு வரலாறு என்பது அநாதியானது. வருட மாதத் தேதி முறையில் கிறித்தவர்கள் சொல்லும் கால அளவுக்குள் அடைத்து விட முடியாதபடி மிக நீண்டது; புராதானமானது . எனவே வெள்ளையன் செய்த சூழ்ச்சி என்ன என்றால் கிரேக்க நாகரீகத்தை ஆதாரமாகக் கொண்டு ஹிந்துக்களின் வரலாற்றை வசதியாக மாற்றி எழுதினான் எல்ஃபின்ஸ்டன் என்ற அதிகாரி என்ன சொன்னான் என்றால் அலெக்சாண்டரின் படையெடுப்புக்கு  முன்னால் பாரதத்தில்  நிகழ்ந்ததாக …

புராண இதிகாசங்கள்

நமது புராண இதிகாசங்கள் நடந்த சம்பவங்களின் தொகுப்பே ஆகும் அவைகள் நடந்தேறியதற்கான துல்லியமான காலக் கணக்கும் இருக்கிறது. இன்றைக்கு மேற்கத்தியத்தனமான சிந்தனையில் ஆங்கிலப் படிப்பில் மூளையைத் துவைத்துக் கொண்டு விட்ட பாரதியர்களுக்கு புராணம், இதிகாசம் ஆகியவை கற்பனையாக இருக்குமோ என்ற சிந்தனையும் இருக்கலாம். அல்லது இது ஹிந்து மதம் சார்ந்த நம்பிக்கைகள் எனத் தோன்றலாம். அதற்குக் காரணம் நம்மை ஆண்ட பிரிட்டீஷ்காரன்  நம்மை மூளைச் சலவை செய்து  MYTHOLOGY கட்டுக்கதை  என்று நம்மை நம்ப வைத்து விட்டான் கிறிஸ்தவர்கள் நம்பிக்கைப் படி உலகம் தோன்றிய …

12Page 1 of 2

Random Post

காலம் நேரம்

காலம் நேரம் அடிப்படையில் காலம் என நாம் சொல்வது அண்டவெளியில் உள்ள கோள்களின் அசைவைப் பொருத்து கணக்கிடுவதாகும். யுகம் …