ஹிந்து நாட்காட்டி ஹிந்து நாட்காட்டி என்பதைப் பஞ்சாங்கம் எனச் சொல்கிறோம் பஞ்சாங்கம் என்ற பெயர் எப்படி வந்தது? 5 பாகங்களைக் கொண்டதால் பஞ்சாங்கம்; அவையாவன திதி வாரம், நட்சத்திரம், யோகம், கரணம் திதி என்றால் நிச்சயமாக வருகின்ற ஒன்று என்பதைக் குறிக்கிறது. உதாரணமாக, சிரார்த்தம், அமாவாசை போன்ற நாட்களில் மூதாதையர் வரும் நாள் அது நிச்சயமாக வருகிறது அதிதி என்றால் முன்னறிவிப்பின்றி வீட்டுக்கு வருபவர்கள். பாரத நாட்டில் அதிதிக்களை தேவர்களுக்கு ஒப்பாக கருதினர். மக்கள் பாரத நாட்டில் ஒரு மூலையிலிருந்து மற்றொரு மூலைக்கு பிரயாணம் …
